இந்தியாவிற்கு பாதிப்பில்லையாம்:சீனா ஆய்வில்!


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த ஊடகவியலாளர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையால், பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில், சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தக்காலம் 70 வருடம் செல்லுபடியாகும்  என்ற போதிலும், தேவையேற்படின் தேவையான நேரத்தில் அதனை நீக்க முடியுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே திருகோணமலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் கடற்படை பயிற்சிகளுடன் இணைந்து, அமெரிக்க எண்ணெய் வயல் சேவை நிறுவனம்,இலங்கை கடற்படையுடன் இணைந்து, கிழக்கு கரையோரத்தில் தமிழர்களின் கடலான மன்னார் மற்றும் காவேரி-அடித்தளத்திற்கு அப்பால் நிலக்கீழ் எண்ணெய் ஆய்வு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனம், சீனாவின் தேசிய எண்ணெய் நிறுவனம் என்பவை பனாமாவின் கொடியின் கீழ் ஆய்வுகளை செய்துவருகின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நோர்வே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியிருந்தது.

பின்னர், மூன்றாம் தரப்பினருக்கான தரவை விற்க நோர்வே நிறுவனத்தை விரும்பவில்லை என்ற ராஜபக்ஸ ஆட்சி, 2001 ம் ஆண்டு நோர்வேவுடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 10.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இழப்பீடு) டாலர் செலுத்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments