போதைப்பொருள் வர்த்தகருக்கு மரணதண்டனை


கொழும்பு- கிரான்ட்பாஸ் பிர​தேசத்தைச் சேர்ந்த 23 வயது போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இன்று மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.

ஹெரொய்ன் காரணமாக சமூகம் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த அழிவிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும், சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழவும் குறித்த குற்றவாளிக்கு மரணத் தண்டனை தீர்ப்பளித்து உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

9 கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் இவருக்கு மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர் 2012ஆம் ஆண்டு கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்​டிருந்தார்.

No comments