துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி


ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் மீது இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (30) மதியம் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸா்ர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments