கோட்டையை தந்தால் யாழ்.நகரிற்கு விடுதலை!


யாழ்.நகரிலுள்ள நெருசலை தவிர்க்க யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்குமாறு தொல்லியல் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுள்ளோம். அவ்வாறு யாழ்.கோட்டை இராணுவத்திற்கு தரப்பட்டால் யாழ்.நகரில் இராணுவத்திடம் உள்ள மக்கள் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படுமென யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். 

இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கோட்டை தொல்லியல் திணைக்களத்தின் ஆழுகைக் குள் இருந்து கொண்டிருக்கின்றது.  அங்கே இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதன் ஊடாக மக்களுக்கு சொந்தமான காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களுக்கு காணிகளை வழங்கலாம். மேலும் இராணுவத்தை முழுமையாக அங்கு நகர்த்த இயலும். இது தொடர்பாக தொடர்பாக ஜனாதிபதி,பிரதமரிடமும் விளக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments