புலனாய்வு அறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு !


புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தான், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரியுள்ள நிலையில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஒருவருக்கான பாதுகாப்பை வழங்குவது அல்லது விலக்குவது குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கப்படுவதில்லை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments