அனந்தி சசிதரனுக்கு ஆங்­கி­லம் தெரி­யாது?

வடக்கு மாகாண அமைச்­சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரது சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். அவரது இந்­தக் கருத்­தினால், நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் நிலைக்கு அனந்தி சசி­த­ரன் தள்ளப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.
இதன்போது, அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸராசா, தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார்.
அப்போது, வழக்கை விசாரித்த நீதியரசர்கள், “அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே? ஆங்­கி­லம் தெரி­யாது என்­றால் எப்­படி பதி­லியை ஆங்­கி­லத்­தில் சமர்­பித்­துள்­ளார்.
இந்த மன்று அவ­ருக்கு இதற்கு முன்­னர் ஆங்­கி­லத்­தில் கட்­ட­ளை­கள் அனுப்­பி­யுள்­ளது. அதன்­போது ஆங்­கி­லம் தெரி­யாது என்ற ஆட்­சே­பனை எழுப்­பப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டியதுடன், அந்த ஆட்­சே­ப­னை­யை­யும் நிரா­க­ரித்­தனர்.
இதன்­போது மனு­தா­ர­ரான டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ, அனந்தி சசி­த­ர­னால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்­று சமர்ப்பித்த ஆட்சேபனையை மன்­றில் பதிவு செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அனந்தி சசி­த­ரன் ஆங்­கி­லத்­தில் உரை­யாற்­றிய காணொலி மன்­றில் சமர்­பிக்­கப்­ப­டும் என்றும், ஆங்­கி­லம் தெரி­யாது என்று கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ள அவருக்கு எதிராக மற்றொரு வழக்கை தாக்கல் செய்யப் போவதாகவும், சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ தெரிவித்தா

No comments