இரு தலைகளுடன் பிறந்த கன்று!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் பசு மாடு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (23) முற்பகல் 11 மணி அளவில் இக்கன்றை ஈன்றுள்ளது.

ஜெயராகுலன் ஜெயமலர் என்பவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும் இன்று மாலை 3 மணி அளவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று இறந்துவிட்டது.

அபூர்வமாக நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற மக்கள் குறித்த கன்றினை பார்த்துச் சென்றுள்ளனர்.

No comments