இந்திய துணைத்தூதரை அழைத்து கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்வு நடத்தும் சிறிதரன்!

அண்மையில் காலமாகிய தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கான அஞ்சலி நிகழ்வொன்று கிளிநொச்சியில் எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம் சிறப்புரையாற்றவுள்ளார்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்த இந்தியாவின் இரு தலைவர்களுக்கும் , ஈழத்தில் அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


No comments