அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி!

அனைத்துலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை, திருக்கோவில் பகுதியில் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை திருக்கோவில் தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றது. அவ்விடத்தில் ஒன்றுகூடிய வலிந்து காணமல் செய்யப்பட்ட உறவினர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய பேரணியை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.

எங்கள் உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை சர்வதேசமே, சர்வதேச நாடுகளே எம்மை கண் திறந்து பாருங்கள், இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எமக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை சர்வதேசமே எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தில்  போராட்டத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்க தலைவிகள், உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.




No comments