உந்துருளி விபத்து! இரு இளைஞர்கள் பலி!
வெள்ளாங்குளம் சந்திக்கு அண்மையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். உந்துருளியும், கன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளான தில் உந்துருளியில் பயணித்த இளைஞர்களே உயிரிழந்தனர்.
நட்டாங்கண்டலைச் சேர்ந்த அந்தோனி சுரேஸ் (வயது-23, ஒட்டன்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் புனிதகுமார் (வயது-24)) ஆகியோரே உயிரிழந்தனர்.
விபத்து வெள்ளாங்குளம் சந்திக்கு அண்மையாக மாங்குளம் – துணுக்காய் வீதியில் நடந்துள்ளது. வெள்ளாங்குளத்தில் இருந்து மல்லாவி நோக்கி உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகினர் என்று கூறப்படுகின்றது.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர்கள் உறவினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நட்டாங்கண்டலைச் சேர்ந்த அந்தோனி சுரேஸ் (வயது-23, ஒட்டன்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் புனிதகுமார் (வயது-24)) ஆகியோரே உயிரிழந்தனர்.
விபத்து வெள்ளாங்குளம் சந்திக்கு அண்மையாக மாங்குளம் – துணுக்காய் வீதியில் நடந்துள்ளது. வெள்ளாங்குளத்தில் இருந்து மல்லாவி நோக்கி உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகினர் என்று கூறப்படுகின்றது.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர்கள் உறவினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment