எதிர்க்கட்சி எனக் கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் அல்ல


தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை எனவும் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் உரிமைக்காக அரசாங்கம் மிகவும் மும்முரமான முறையில் முன்னிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தெரியவருவது, அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக தற்போதைய எதிர்கட்சி கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments