விக்கி எதிர் தவராசா - அறிக்கைப் போர்


வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் எதிர்கட்சித் தலைவர் சி.தவரா சாவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அறிக்கை போர் இடம்பெற்று வருகிறது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஊடகவியலாளர் கேள்வி பதில் என தலைப்பிட்டு வாராந்தம் ஊடகங்களுக்குக் கேள்வி பதில் அனுப்பி வருகிறார். 

அண்மைக்காலமாக முதலமைச்சர் சீ.வி.வி க்னேஷ்வரனின் அதே முறையை பயன்படுத்தி ஊடகவியலாளர் கேள்வி பதில் என தலைப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரும் கேள்வி பதிலை அனுப்பி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கேள்வி பதிலை அனுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முலதமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத முதலமைச்சர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என கூறியிருந்தார். 

இதற்கு பதிலாக ஒரு கேள்வி பதில் அனுப்பிய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானத்தின் தயவிலேயே எதிர் கட்சி தலைவராக இருக்கிறார் என  கூறியுள்ளார். 

இதற்கு பதிலளத்தி மீண்டும் ஒரு கேள்வி பதிலை அனுப்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரை போல் தான் வாயால் வடை சுடுபவர் அல்ல என கூறியுள்ளார். அண் மைக்காலமாக இந்த இருவருக்குமடையிலான அறிக்கை போரே ஊடகங்களில் பிரபல்யம் ஆகியுள்ளது.

No comments