கூட்டமைப்பே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியுமாம்?

வடமாகாணசபையில் எதிர்கட்சி தேவையில்லை. காரணம் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க்;கட்சி இருப்பதாக கூறி வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். 

வடமாகாணசபையின் 129வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ந டைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து சபையில் எதிர்கட்சி உறுப்பினர் அலிக்கான் செரிவ் எழுந்து இந்த அவையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதனால் எதிர்கட்சியினராகிய நாங்கள் இந்த சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நாங்கள் இந்த சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோமென கூறினார். இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

No comments