ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்துள்ளதை தொடர்ந்தே மேற்படி கருத்துக்கள் முன்வைக்கபடுகின்றன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன். எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து எதிர்வரும் காலத்தில் தீர்மானம் எடுக்கும்.
இருப்பினும் ஞானசார தேரர் பொதுமன்னிப்பு பெறவேண்டுமாயின் சில காலத்திற்கு தண்டனையை அனுபவிக்கவேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு வழங்கலாம் என்று சட்டம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments