கிளிநொச்சியில் நாளை ஆர்ப்பாட்டம்!

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி  கோரியும், கிளிநொச்சியில் நாளை (31) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுகப்படவுள்ளது.

சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments