இலங்கையில் எலிக்காய்ச்சல்! 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்!!

இலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

No comments