மன்னாரில் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி!

மன்னார் வயல் வீதியில் வசித்து வரும் காஸ்பர் பிள்ளை டோரிஸ் திரேசா என்பவர் தனது நூறாவது பிறந்த நாளை நேற்று சனிக்கிழமை 18-08-2018 தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது மன்னார் வயல்வீதியில் வசித்து வருகிறார். 1918 இல் பிறந்த இவர் 2018 தனது நூறாவது வயதில் கால் பதிகின்றார். பல துன்பங்கள் கடந்து வந்த இவர் உலக போர் காலப்பகுதியிலும் இலங்கை சுகந்திரம் அடைந்த காலப்பகுதியிலும் இலங்கை மண்ணில் வசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments