குழப்பத்திற்கு காரணம் கூட்டமைப்பே!

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட குழப்ப நிலைக்கு முழுக் காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமை மற்றும் புதிய அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments