சிறுமி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி!

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற  நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

”வருவான் பிரபாகரன், மீண்டும் வருவான் பிரபாகரன் ” என்ற கோஷத்தை எழுப்பியவாறு சங்கானை பிரதேச செயலரிடம் மனு கையளிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






No comments