ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார். 25.06.2018-ஆம் நாள் அன்று அவர் ஆற்றிய உரை:

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவுடைய ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளேன்.

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழும் ஈழத் தமிழர்கள்தான் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. 1833 கோல்புரூக் ஆணையம் அளித்த அறிக்கையின்படி, தமிழர்கள் 26,550 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்தனர்.

1901-இல் பிரித்தானிய அரசு மாகhணக் கவுன்சில்களை வடிவமைத்தபோது 7,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைத் தமிழர்கள் சிங்களவர்களிடம் இழந்தனர். 1948 பிப்ரவரி 4-ஆம் தேதி பிரித்தானிய அரசு வெளியேறிய பின் சிங்களக் குடியேற்றத்தால், மேலும் 7500 சதுர கிலோ மீட்டரை தமிழர்கள் இழந்தனர். நாலாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். உரிமைகள் பறிக்கப்பட்டன. கhவல்துறை இராணுவ அடக்குமுறை ஏவப்பட்டது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்கhக அறவழியில் போராடினார்கள். சிங்கள இராணுவத்தின் கொடிய அடக்குமுறைக்கு ஆளானார்கள்.

சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. உச்சகட்டமாக 2009 ஏப்ரல் மே மாதங்களில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சேனல் 4 தொலைக்கhட்சி சாட்சியங்களோடு இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தபோது, மனிதகுலத்தின் மனசாட்சி நடுங்கியது. 2014 மார்ச் மாதத்தில், இதே மனித உரிமைகள் மன்றம், இலங்கை அரசு செய்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவித்தது. சிங்கள அரசு, இதனை ஏற்கவில்லை. எந்த விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது. எனவே, மனித உரிமைகள் கவுன்சில், ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; சுதந்தித் தமிழ் ஈழத்திற்கhன பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றம் நடத்த வேண்டும்.

இந்த உரை முடிந்தபின், பிற்பகலில் மனித உரிமைகள் கவுன்சிலில் பக்க அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அர்ஜூனராஜ் அவர்கள் பங்கேற்றார். அங்கு அவர் பத்து நிமிடங்கள் ஆற்றிய உரையில், திருக்குறளையும், நாலடியாரையும் மேற்கோள் கhட்டி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்து, அரசு என்பது மக்களைப் பாதுகhப்பதற்குத்தான்; கொல்வதற்கு அல்ல. ஆனால், தமிழர்களை இலங்கை அரசு இராணுவத்தின் மூலம் வேட்டையாடிக் கொன்றது. இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டியது ஐ.நா. மன்றம்தான்.

அதனால்தான், கிறித்துவர்கள் தேவாலயத்திற்குச் செல்வது போல், இÞலாமியர்கள் மசூதிக்குச் செல்வது போல், இந்துக்கள் கோவில்களுக்குச் செல்வது போல், நாங்கள் நீதிகேட்டு, ஐ.நா. மன்றத்தில் முறையிடுகிறோம். சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்; சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமும், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கhன பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பேசினார்.

இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அம்மையார், சிறந்த பேச்சு என்று பாராட்டினார்.

இதன்பின்னர், இந்த அவையில், குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த ஈழத்தமிழர்கள் தங்கள் அவலத்தைச் சொல்லும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஒரு ஈழத்தமிழ்ப் பெண், தன் மகனை சிங்கள இராணுவம் 2009 போருக்குப் பின்னர் கடத்திச் சென்றதாகவும், அவன் உயிரோடு இருக்கின்றானா என்பதே தெரியவில்லை என்றும் உருக்கமாகப் பேசினார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு சிங்களப் பிரதிநிதிகள், அந்தச் சகோதரிக்கு அருகில் சென்று, பேசக்கூடாது என்று ஆத்திரத்துடன் கத்தினார்கள். அதனை எதிர்த்து, திரு அர்ஜூனராஜ் அவர்களும், திருமுருகன் கhந்தி அவர்களும், இது முறையல்ல; சிங்களர்கள் செய்வது அக்கிரமம் என்று கூறினார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற அம்மையார், கhவலர்களை அழைத்து, சிங்களப் பிரதிநிதிகளை வெளியேற்றினார்.

இந்தத் தகவல்களையும், உரையாற்றியதையும் அர்ஜூனராஜ் அவர்கள், பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் தெரிவித்தார்.

‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
26.06.2018

No comments