கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு! கடத்தியவர் கைது!

வவுனியா குச்சென் வீதியில் கடந்த 31ஆம் நாள் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை மீட்கக்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் குறித் குழந்தை மீட்க்கப்பட்டதோடு, குழந்தையைக் கடத்திய நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள குறித்த குழந்தையின் தந்தை குழந்தையை செல்பேசியில் காண்பிக்க தாய் மறுத்ததன் காரமாகவே குழந்தையைக் கடத்த நோிட்டது எனவும் குழந்தை சுகமாகவும் பத்திரமாகவும் இருப்பதாக காவல் நிலையத்திற்கு செல்பேசி மூலம் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே புதுக்குடியிருப்பிப்புப் பகுதியில் குறித்த குழந்தை மீட்கப்பட்டது.

வவுனியா குட்செட் வீதியில் 1ம்  ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும், தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும்,  இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments