யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இந்திய றோ உளவாளிகள்


இலங்கையின் வடக்கில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளிகளை எடுத்து  இலங்கை புலனாய்வுப் பிரிவு அச்சுறுத்திவந்த நிலையில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரும் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். பொலிசார் மற்றும் இந்திய துணைத்தூதரகத்தில் பணியாற்றும் இந்திய புலனாய்வு  உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள், பாதுகாவலர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.


தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக நேற்று (01.06.2018) வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெளியே யாழ்.பொலிசார் பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.

போராட்டம் ஆரம்பமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.பொலிசார் தமது கையடக்க தொலைபேசிகளில் போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

அதேவேளை துணைத்தூதரகத்தினுள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகளும் துணைத்தூதரக வாளாகத்தினுள் நின்று போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர். 

No comments