கேபிள் இணைப்பாளர் கைது!


அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க காரணமான டாண் தொலைக்காட்சியின் கேபிள்கள் அகற்றப்பட்டுவருகின்றது.

வடமராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கேபிளால் ஏற்பட்ட விபத்தினால் இருவர் உயிரிழந்த நிலையில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வல்லையில் பிரதான மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட கேபிள்கள் இலங்கை மின்சாரசபையினரால் அகற்றப்பட்டுவருகிறது.

இதனிடையே குறித்த மின் தாக்குதலில்  இருவர் உயிரிழக்க காரணமென தெரிவித்து உள்ளுர்; கேபிள் இணைப்பாளரொருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments