ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நகரசபைத் தலைவர் கைது


ஆட்கடத்தில் குற்றச்சாட்டுத் தொடர்பில் தலவாக்கலை லிந்துல நகர சபை தலைவர் அசோக்க சோபல கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸாரால் நேற்று (03) இரவு 09 மணி அளவில் தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவரை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யட்டதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி அக்கரபத்தனை பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யபட்ட சம்பவம் தொடர்பில், தலவாக்கலை லிந்துல நகர சபையின் தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யபட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments