வவுனியாவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து நேற்று செவ்வாயக்கிழமை இரவு (15.05.2018) 10.00 மணியளவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா உலுக்குளம், சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.

அதே பகுதியினை சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது-48) , அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது-15) என அவது உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா குற்ற தடவியல் காவல்துறையினருடன் இணைந்து உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments