தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை மறுக்கப்படுவது ஆபத்தானது - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை மறுக்கப்படுவது ஆபத்தானது என்று பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.



இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் முதன்மை உரையாற்றும் பொழுதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், எந்த அரசியல் தீர்வும் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழின அழிப்பை விசாரணை செய்வதற்கும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் விடயத்திலும் நீதி கிட்டும் வகையில் பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்றும் தனது உரையில் ஜெரமி கோர்பின் மேலும் தெரிவித்தார்.

No comments