பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை நாள்

 ஈழத்தீவில் மீண்டுமொரு இனவழிப்பு நிகழ்வதை அனுமதிக்க முடியாது என்று பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

பிரத்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே நிழல் அமைச்சரவை மேற்கண்டவாறு கருத்துக் கூறியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வில் தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் முக்கிய உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து நிழல் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் பன்னாட்டு அபிவிருத்தி அமைச்சர் கேற் ஒசேமோர், சமாதான விவகார நிழல் அமைச்சர் பபியன் கமில்டன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, ஜொன் ரையன், ஸ்ரீபன் ரிம்ஸ், ஸ்ரீவன் பவுண்ட், வெஸ்ற் ஸ்ரிறீற்ரிங்,   கரத் தொமஸ், ரான் டேசி ஆகியோரும் உரையாற்றினர்.

இவர்கள் அனைவரும் தமது உரைகளில் தமிழ் மக்களுக்கான வாழ்வுரிமையை வலியுறுத்தினர்.
ஈழத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தத்தால் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை போன்று மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

No comments