தூத்துக்குடி படுகொலை! திருகோணமலையில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்

தமிழ்நாடு தூத்துக்குடியில் தமிழகக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இப்படுகொலைக்குக் கண்டித்தும் கண்டனப் போராட்டம்  திருகோணமலையில் நடைபெற்றது.

இன்று (26) சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்சார நிலைய வீதி பொதுச் சந்தைக்கு முன்னால் குறித்த அஞ்சலி நிழக்வும் கண்டனப் பேராட்டமும் நடைபெற்றது. குறித்த கண்டனப் பேரணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், காலை 9 மணி தொடக்கம் 9.30 மணி வரை நடைபெற்றது. இதில் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.






No comments