இரத்தம் வழிய வழியத் தாக்குதல்! வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய அரசியலை நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் முன்னெடுத்துவருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நேரடியாக ஈழம் சென்று சந்தித்துவந்ததுடன், நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் என வெளிப்படையாக பிரகடனம் செய்தவர். அவர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வந்த சிலையில் சில நாட்களாகவே அதற்கு கடுமையாக்க பதிலளித்துவந்தார் வைகோ. இந்த நிலையில், இன்று திருச்சிக்கு வருகை தரவிருக்கும் சீமான், வைகோ ஆகியோரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் குழுமியிருந்தனர் இரு கட்சியின் தொண்டர்களும். அவர்களுக்கு இடையே சலசலப்பு சிறிதாக துவங்கி கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.

No comments