தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ். பல்கலை சமூகம் நாளை ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.


No comments