நைஜீரியாவில் ஜேர்மனி நாட்டவர் கடத்தல்!

நைஜீரியா நாட்டின் மேற்கு பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜேர்மனி நாட்டவர் ஒருவர் ஆயுதம்தாங்கிய பயங்கரவாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

டில்லாபேரி பகுதியில் உள்ள அயோரோவ் நகரில் ஐந்துபேரை பயங்கரவாதக் குழு கடந்த புதன்கிழமை கடத்திச் சென்றது. அவர்களில் உள்ளூர்வாசிகள் நான்குபேர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரை விடுவிக்கவில்லை. இந்நிலையில் அவரது நிலை  என்னவானது? என்பது தெரியாத நிலைய தொடர்கின்றது.

No comments