உயிர்கள்தந்து உருவாக்கிய மேதினவிழா - ந.கிருஷ்ணசிங்கம்
காலப்பெருவெளியில் கதிற்றெழுந்த
தொல்நிகழ்வின் நினைவுகளை
மேதினம் என்ற விழாவின் தலைப்பு
வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
1889 ஆம் ஆண்டின்
மே முதலாம் நாள்
தொழிலாளார் ஒன்றிணைந்துகூடித்
தமக்குப் பன்னிரெண்டு மணிநேரம்
வேலையைத் தொடரமுடியாது.
எட்டுமணி நேரம்மட்டுமே இனி
வேலைசெய்வோம் என்பதைத்
திண்ணமாகத் தெரிவித்து,
அந்நாளில்.. அமெரிக்காவில்
சிக்காக்கோ நகரில்
தொழிலாளர் வற்கத்தினர்
தொழில்மறுப்புச் செய்ததும்,
அமெரிக்க முதலாளித்துவ மூற்கம்
அரச வன்முறையை ஏவி,
அவர்களை அடித்து நொருக்கியதும்,
அனேகர் அங்கயீனராகியதும்,
அவர்களில் ஆறுபேர்கள் ஆவிதுறந்ததுவும்,
மீதுளோர் அந்த ஒடுக்குமுறைக்கு
எதிராகக் கொதித்தெழுந்து..
அன்று, அத்தெருவில் தேங்கிக்கிடந்த
தம் தோழர்களின் குருதியில்..
தங்களின் உடைகளைக்
களைந்து, நனைத்து அதைச்
செங்கொடியாய் உயர்த்தி..
உரிமை முழக்கமிட்ட நிகழ்வால்..
முதல் மேதினம் அவனியிலே
அவதரித்துப் பரிணாமித்ததை
நாம் அறிவோம்.
மானிடம் வென்றதென்றும்
மான்பு சிறந்ததென்றும் மகிழ்ந்து,
முழக்கங்களிடும் இன்றைய காலத்திலும்
கொடிய வறுமையின் பிடியிலே உழலும்
ஒரு வற்கமாகத் தொழிலாளர் வாழ்வதும்
முதலாளித்துவ சக்திகளால் எங்கும்
அவர்கள் பலகோணங்களில்..
கொடுவதைகள் உறுவதும்,
உலகப்பரப்பெங்கும் காணுகின்றோம்.
இந்த ஒடுக்குமுறையின் வடிவமானது
மென்மேலும் வளர்ந்து, இன்று
சடைத்துக் கிளைகள்பரப்பி,
இனங்களுக்கிடையே பல்வேறு
பிரச்சனைகளைப் பெருக்கிப்
பேரினங்களின் மூற்கத்திக்கும்,
அவ்வினங்களால் மூட்டப்படும்
போர்களுக்கும் உள்ளாகி எங்கும்,
சிற்றினங்கள் சிதறுண்டு ஒடுங்கித்
தம் உயிர்களை இழக்கும்படியான
சீற்றக்கனலில் தினமும் சிதைவுறுகின்றன.
மதவாத சத்திகளின் உறுதுணையால்
வென்றெழுந்து நாடுகளை ஆளும்
அரசுகள், சிற்றினங்களின் ஒடுக்கலுக்கு
எற்றவாறு தமது படைவலிமையைப்
பிரயோகித்து, எதிர்வாத சக்திகளை
நசுக்குகி, இனவழிப்புநடத்துகின்றன.
பாட்டாளிவற்கத்தினரின் பெருந்தியாக
முன்னெடுப்புகளால் 1890 ஆம் ஆண்டு
நடந்தேறிய மேதினப் பேரணியில்
அவர்கள் பெற்றவெற்றியினால் மனிதவற்கம்
எட்டுமணி நேரவேலை மற்றும், ஓய்வு
முதலான.. கேட்டவை கிடைக்கப்பெற்று,
பாட்டுடைத் தினமாக இப்பாரில் இன்று
மேதினம் பாராட்டப்பட்டாலும்,
”உலகத் தொழிலாளர்களே ஓன்றுபடுங்கள்.”
என்ற, இந்தத் தொழில்சார்ந்த எழுச்சி
முழக்கமானது, இன்று உலகில்
ஒடுக்கப்படும் மக்களின் துயர்சொல்லும்
தினமாகவும் மாறியுள்ளது.
தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்து,
அந்நியதேசங்களில் வந்தேறிகளாய் வாழும்
இனங்களின் தாயக விடுதலைகருதிய
முழக்கங்களுக்கும், ஊர்வலங்களுக்கும்
ஏற்றவோர் தினமாகவும்.. இன்று இந்த
மேதினம் பரிணாமவளற்சி பெற்றுள்ளது!
தொல்நிகழ்வின் நினைவுகளை
மேதினம் என்ற விழாவின் தலைப்பு
வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
1889 ஆம் ஆண்டின்
மே முதலாம் நாள்
தொழிலாளார் ஒன்றிணைந்துகூடித்
தமக்குப் பன்னிரெண்டு மணிநேரம்
வேலையைத் தொடரமுடியாது.
எட்டுமணி நேரம்மட்டுமே இனி
வேலைசெய்வோம் என்பதைத்
திண்ணமாகத் தெரிவித்து,
அந்நாளில்.. அமெரிக்காவில்
சிக்காக்கோ நகரில்
தொழிலாளர் வற்கத்தினர்
தொழில்மறுப்புச் செய்ததும்,
அமெரிக்க முதலாளித்துவ மூற்கம்
அரச வன்முறையை ஏவி,
அவர்களை அடித்து நொருக்கியதும்,
அனேகர் அங்கயீனராகியதும்,
அவர்களில் ஆறுபேர்கள் ஆவிதுறந்ததுவும்,
மீதுளோர் அந்த ஒடுக்குமுறைக்கு
எதிராகக் கொதித்தெழுந்து..
அன்று, அத்தெருவில் தேங்கிக்கிடந்த
தம் தோழர்களின் குருதியில்..
தங்களின் உடைகளைக்
களைந்து, நனைத்து அதைச்
செங்கொடியாய் உயர்த்தி..
உரிமை முழக்கமிட்ட நிகழ்வால்..
முதல் மேதினம் அவனியிலே
அவதரித்துப் பரிணாமித்ததை
நாம் அறிவோம்.
மானிடம் வென்றதென்றும்
மான்பு சிறந்ததென்றும் மகிழ்ந்து,
முழக்கங்களிடும் இன்றைய காலத்திலும்
கொடிய வறுமையின் பிடியிலே உழலும்
ஒரு வற்கமாகத் தொழிலாளர் வாழ்வதும்
முதலாளித்துவ சக்திகளால் எங்கும்
அவர்கள் பலகோணங்களில்..
கொடுவதைகள் உறுவதும்,
உலகப்பரப்பெங்கும் காணுகின்றோம்.
இந்த ஒடுக்குமுறையின் வடிவமானது
மென்மேலும் வளர்ந்து, இன்று
சடைத்துக் கிளைகள்பரப்பி,
இனங்களுக்கிடையே பல்வேறு
பிரச்சனைகளைப் பெருக்கிப்
பேரினங்களின் மூற்கத்திக்கும்,
அவ்வினங்களால் மூட்டப்படும்
போர்களுக்கும் உள்ளாகி எங்கும்,
சிற்றினங்கள் சிதறுண்டு ஒடுங்கித்
தம் உயிர்களை இழக்கும்படியான
சீற்றக்கனலில் தினமும் சிதைவுறுகின்றன.
மதவாத சத்திகளின் உறுதுணையால்
வென்றெழுந்து நாடுகளை ஆளும்
அரசுகள், சிற்றினங்களின் ஒடுக்கலுக்கு
எற்றவாறு தமது படைவலிமையைப்
பிரயோகித்து, எதிர்வாத சக்திகளை
நசுக்குகி, இனவழிப்புநடத்துகின்றன.
பாட்டாளிவற்கத்தினரின் பெருந்தியாக
முன்னெடுப்புகளால் 1890 ஆம் ஆண்டு
நடந்தேறிய மேதினப் பேரணியில்
அவர்கள் பெற்றவெற்றியினால் மனிதவற்கம்
எட்டுமணி நேரவேலை மற்றும், ஓய்வு
முதலான.. கேட்டவை கிடைக்கப்பெற்று,
பாட்டுடைத் தினமாக இப்பாரில் இன்று
மேதினம் பாராட்டப்பட்டாலும்,
”உலகத் தொழிலாளர்களே ஓன்றுபடுங்கள்.”
என்ற, இந்தத் தொழில்சார்ந்த எழுச்சி
முழக்கமானது, இன்று உலகில்
ஒடுக்கப்படும் மக்களின் துயர்சொல்லும்
தினமாகவும் மாறியுள்ளது.
தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்து,
அந்நியதேசங்களில் வந்தேறிகளாய் வாழும்
இனங்களின் தாயக விடுதலைகருதிய
முழக்கங்களுக்கும், ஊர்வலங்களுக்கும்
ஏற்றவோர் தினமாகவும்.. இன்று இந்த
மேதினம் பரிணாமவளற்சி பெற்றுள்ளது!
Post a Comment