பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து பாடசாலை மாணவன் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் நடத்துள்ளது.

இன்று வவுனியா மன்னார் வீதியில் பூவரசங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கிப் பேருந்து பயணித்தபோது அரச பேருந்தின் சாரதி, தனியார் பேருந்து ஒன்றுடன் போட்டிக்கு சவாரி செய்துள்ளார்.

அந்நேரம் தனியார் கல்வி நிலையத்திற்குச் பெண் பிள்ளைகளுடன் சென்றுகொண்டிருந்த மாணவன் மீது வீதியில் பேருந்து மோதுவது போல் செல்லவே மாணவன் பேருந்தை நோக்கிச் கூச்சலிட்டு திட்டியுள்ளார்.

பின்னர் சிறிது தூரம் சென்றபின் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிய சாரதியும், நடத்துனர் மற்றும் பிறிதொருவரும் குறித்த மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.



No comments