கேப்பாப்புலவில் பற்றியெரிந்த தேக்கங்காடு!


கேப்­பா­பிலவு படை­மு­காம் வாயிலுக்கு அண்மையில் உள்ள தேக்­கங்­காட்­டுப் பகு­தி­யில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ பரவியது. இதில் சுமார் 45 ஏக்­கர் தேக்­கங்­காடு எரிந்­தி­ருக்­கக்­ கூ­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். தீ பரவியதையடுத்து 59 ஆவது படைப்­பி­ரி­வி­னர் தண்­ணீர் விசிறி தீயைக் கட்­டுக்­குள் கொண்­டு­ வந்­த­னர். கேப்­பா­பு­லவு பகு­தி­யில் 420 ஆவது நாளாக நில மீட்­புப் போராட்­டம் நடத்­தும் மக்­கள் அமைத்­துள்ள போராட்ட கொட்­ட­கை­யில் இருந்து 100 மீற்­றர் தொலை­வில் உள்ள வன­வள பாது­காப்பு பிரி­வுக்­குச் சொந்­த­மான தேக்­கங் காடு­களே தீ பற்­றின

No comments