ஆதாரங்களை வெளியிடுமாறு ஈபிடிபிக்கு சவால் விடுகிறார் சிறிகாந்தா!


உள்ளூ­ராட்சி சபைகளில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஈபி­டி­பி­யின் ஆத­ர­வைக் கோரி­ய­தற்கு ஆதா­ரம் இருந்­தால் அதனை வெளி­யி­டுங்­கள் பார்ப்­போம் என்று சவால் விடுத்­துள்ளார் ரெலோவின் செய­லா­ளர் ந.சிறீ­காந்தா. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு கேட்டு கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் ஆகி­யோர் பல தட­வை­கள் ஈபி­டிபி தலை­வர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வு­டன் தொலை­பே­சி­யில் பேசி­யி­ருந்­த­னா். இது சம்­பந்­த­மான ஆதா­ரங்­களை நாம் வௌியி­டத் தயாா் என்று ஈபி­டி­பி­யின் யாழ்ப்­பாண மாவட்ட அமைப்­பா­ளா் தெரி­வித்­தார் என்று ஊட­கங்­க­ளில் நேற்று செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறீ­காந்தா, ‘‘ஆதா­ரங்­கள் இருப்­பின் அவற்றை எந்த தயக்­க­மும் இன்றி வௌியி­டுங்­கள் இதனை நாங்­கள் பகி­ரங்­க­மா­கவே கோரு­கின்­றோம். தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­து எந்­த­வொரு சபை­க­ளி­லும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அதற்­காக அவா்­கள் உத்­த­மர்களோ, மகாத்­மாக்­களோ அல்­ல. அவா்­க­ளு­டைய தோல் விரை­வில் உரிக்­கப்­ப­டும். அப்­போது அனைத்­தும் தெரி­ய­வ­ரும். உள்­ளு­ராட்சி சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­கக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு கோரி­யி­ருந்­த­தாக ஈ.பி.டீ.பி. சாா்ந்தவா்­கள் தொிவித்­தி­ருந்­த­னா். நாங்­கள் அதனை ஆத­ரவு என்று கூற­வில்லை. மாறாக ஒரு கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தக் கட்­சி­யு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். சபை­க­ளில் பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் கட்­சி­களே அந்­தந்­தச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைப்­பது, அதற்கு மற்­றைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது என்ற நோக்­கிலே கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இது எந்த வகை­யி­லும் ‘டீல்’ ஆகி­வி­டாது, அத்­து­டன் அத்­த­கைய ‘டீல்’ அர­சி­யல் தமிழ் கூட்­ட­மைப்­பின் அக­ரா­தி­யிலே இல்லை. மேலும் டக்­ளஸ் தேவா­னந்தா உட்­பட்­ட­வா்­க­ளு­டன் பேசி­யது ரேலோவே தவிர தமி­ழ்த்­ தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பல்ல – என்­றார்.

No comments