தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின எழுச்சி நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 01-05-2018 (செவ்வாய்க்கிழமை) பி.ப 3.00 – பி.ப 6.00 மணிவரை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மேதின நிகழ்விற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டள்ள கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.  

No comments