பல்­கலை. ஊழி­யர்­கள் போராட்­டம் தொட­ரும்!!


பல்­க­லைக்­க­ழகக் கல்­வி­சாரா ஊழி­யர்­க­ளின் கோரிக்கை ஏற்­றுக் கொள்­ளப்­பட்­ட­போ­தும் போராட்­டம் முடி­ய ­வில்லை. கடி­தம் ஒன்­றைப் பரி­மா­று­வ­தில் ஏற்­பட்­டுள்ள தாம­தமே இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட் டது. 10 வீத சம்­பள அதி­க­ரிப்­புக்கு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்­கள் உட்­பட அனைத்­துப் பல்­க­லைக்­க­ழக சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னம் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளது. நேற்­று­முன்­தி­னம் இந்­தத் தீர்­மா­னம் எட்­டப்­பட்­ட­போ­தும் அவற்றை 2020 ஆம் ஆண்­டு­வரை எந்த அடிப்­ப­டை­யில் கொள்கை தயா­ரிப்­பது என்­பது பற்­றிய பேச்சு நேற்று இடம்­பெற்­றது. பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வின் அதி­கா­ரி­க­ளு­டன் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. சம்­பள அதி­க­ரிப்­புப் பற்­றிய பரிந்­து­ரைக் கடி­தம் உயர் கல்வி அமைச்­ச­ரால் திறை­சே­ரிக்­குக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அத­னால் சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­வது பற்­றிய சுற்­ற­றிக்­கையை திறை­சேரி பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கும். உயர் கல்வி அமைச்­சர் அந்­தக் கடித்­தில் கையெ­ழுத்­தி­ட­வேண்­டும். ஆனால் அர­சி­யல் குழப்­பங்­க­ளால் அவர் சிறி­கொத்­தா­வில் உள்­ளார். அத­னா­லேயே கையெ­ழுத்­துப் பெறு­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடி­தம் கிடைக்­கும்­வரை தமது பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டம் தொட­ரும் என்று ஊழி­யர் சங்­கம் தெரி­வித்­தது. யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட மாண­வர்­கள் நடத்­தும் 3 நாள்­கள் கொண்ட கண்­காட்சி இன்று ஆரம்­ப­மா­கி­றது. அதற்கு அவ­சர உத­வி­களை மட்­டும் ஊழி­யர்­கள் வழங்­கு­வர் என்­றும் சங்­கம் தெரி­வித்­தது.

No comments