ஆர்ப்பாட்டம் நடத்தியர்கள் மீது தடியடி ஜனநாயக விரோதமானது - திருமுருகன் காந்தி!

சீமானை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் கைது செய்யப்படுவது ஜனநாயக விரோதமானது என்றும் அவர் கூறினார். சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைதுக்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

சீமானை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது ஜனநாயக முறையில் போராடியவர்களை சிறையில் அடைப்பது சரியல்ல என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

காலையில் கைதானவர்களை இன்னும் விடுவிக்காததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.







No comments