வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி


போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இதனைக் கூறியுள்ளார். கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments