ராஜீவ் கொலை கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்கலாம்: கார்த்திகேயன்


ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்கள் அனைவரையும் கருணை அடிப்படையில் விடுவிக்கலாம் என சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைத்து இருந்தால் தமிழகத்தில் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என அவர் கூறினார். ராஜீவ்கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அனைவரையும் கருணை அடிப்படையில் விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சிறையில் இருப்பவர்கள் தாங்கள் செய்தது தவறை உணர்ந்து சிறையில் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்கலாம் எனக் கார்த்திகேயன் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்றபோது சி.பி.ஐ இயக்குனராக பணியாற்றியவர் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments