தலைமன்னார் கடலில் 24 கிலோ தங்கத்துடன் சிக்கியது படகு!


தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் நேற்று மாலை 5.30 மணியளவில் 24 கிலோ தங்கக்கட்டிகளுடன் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை 170 மில்லியன் ரூபா பெறுமதி வாய்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது

No comments