அத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை!


தென்னிலங்கை மீனவர்களின் கடலட்டை பிடிப்பினை ஆதரித்து பணம் வாங்கி மீனவ சங்க தலைவர்கள் பதுங்கிக்கொள்ள அதனை எதிர்த்து குரல் எழுப்பிய மீனவர் ஒருவரது படகு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம்,வடமராட்சிகிழக்கு,கட்டைக்காடு,முள்ளியான் கடற்கரையில் தரித்துவிடப்பட்ட,நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பவையே நேற்று மன்தினமிரவு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

    முள்ளியானைச் சேர்நித செபமாலை சுஜீபன் என்பவரது படகே நள்ளிரவு விசமிகளால் தீயிட்டு நாசம் செய்யப்பட்டுள்து.குறித்த படகும் அதன் சொந்தகாரருமான செ.சுஜீபன் கடந்த மாதம் 20ம் திகதி வட்டைக்காட்டு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த வெளி மாவட்ட மீனவர்களை சுற்றிவளைத்து பிடித்து,நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தவர் என தெரியவருகின்றது.அதற்காகவே அவரால் பயன்படுத்தப்பட்ட படகு பழிவாங்கும் நோக்குடன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலை கண்டுகொள்ளாதிருக்க மீனவ அமைப்பு தலைவர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் மௌனம் காத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments