சிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்!

சிறீலங்கா விமான நிலையக் கணினிகளுக்குள் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளதாக தமிழீழ இணைய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மின்னஞ்சல் வாயிலான ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்து செய்திக்குறிப்பில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா  விமான நிலைய கணினி மற்றும் வெளிநாடுகளில் இயங்கும்  சிறிலங்கா துதூவராலய கணினி போன்றவற்றினுள்  ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) அவர்களின் தகவல்களை கைப்பற்றியுள்ளனர்.

சிறிலங்கா  விமான நிலைய கணினியிலிருந்து சிறிலங்கா விமான நிலையத்தில் பணி புரியும்   364 பணியாளரின் பதவி நிலை ,  பெயர் விபரம்,  தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் , சிறிலங்கா விமான நிலைய வர்த்தக நிலையகங்களில் 63 உரிமையாளரின்  விபரம்,  தொலைபேசி எண் மற்றும் முகவரிகள்  போன்றவற்றையும்  கைப்பற்றி  உள்ளனர்.

இதே போன்று 2009  க்கு பின்னர்  வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா அரசுடன் வர்த்தக ரீதியாகவும், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தகவல்களையும், மற்றும் சிறீலங்கா சென்றுவரும் தமிழர்கள் விபரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், சுவிஸ், கனடா, நோர்வே, டென்மார்க், அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நியூஸ்லாந் போன்ற நாடுகளிலிருந்து சிறிலங்கா அரசுடன் மறைமுகமான தொடர்புகளைப் பேணும் தமிழர்களின் விபரம் வெளிநாடுகளில் இயங்கும்  சிறிலங்கா துதூவராலய கணனிக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber.Force) தகவல்களை திரட்டியுள்ளனர்.

மே 18 தமிழின அழிப்பு நாளான அன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில்  300- க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது  சைபர் தாக்குதல் நடத்தி சிங்கள அரசை ஆட்டம் காணவைத்ததைத் தொடர்ந்து மீண்டுமோர் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் திரட்டிய சில தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.





No comments