சவூதி விமான நிலையம் மீது ஏவுகணைகளைத் தாக்குதல்களை நடத்தினர் ஹூதிகள்


நேற்று திங்கள்கிழமை முன்னதாக யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியதாக, ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு தாக்குதல்களிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் பல ஆண்டுகளாக நிலவிய ஒப்பீட்டு அமைதிக்குப் பின்னர் ஹூதிகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க பதற்ற அதிகரிப்பை இந்த மோதல் பரிமாற்றம் குறிக்கிறது.

ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுப்பதற்காக சனா விமான நிலையத்தை சவூதி அரேபியா குறிவைத்ததாக ஹூதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து சவூதி அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

சனா விமான நிலையத்தின் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு எதிராக விமான நிறுவனங்களை எச்சரித்த ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

No comments