அயதுல்லா கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பிரமுகர்கள் வருகை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் படையெடுப்பின் தொடக்கத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு ஈரான் அஞ்சலி செலுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் அதிகாரிகள் தெஹ்ரானில் உள்ளனர்.
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கு ஈரான் தயாராகி வரும் நிலையில் , பல வெளிநாட்டு பிரமுகர்கள் அந்நாட்டிற்கு வந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டது.
இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, சீனா, பெலாரஸ், ஈராக் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் அனைவரும் ஈரானிய தலைநகரில் தரையிறங்கினர் என அரசு தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.
இந்தியத் தூதுக்குழு ஒன்று வெள்ளிக்கிழமை தெஹ்ரானுக்கு வந்தடைந்து , அங்குள்ள அயதுல்லா கமேனியின் உடல் பேளைக்கு முன்பு அஞ்சலி செலுத்தியது.
கமெனியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை முடிவடையவுள்ளன. இதில் மில்லியன் கணக்கான ஈரானியர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமெனியின் உடல் பேளைக்கு ஏற்கனவே பெரிய மொசல்லா மசூதியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, கமெனியின் உடல்பேளை ஷியா முஸ்லிம்களின் புனித நகரமான கோம் மற்றும் ஈராக் ஆகிய நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
இறுதி மரியாதை நிகழ்வின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக, ஈரானின் வான்வெளியும், உடற்பேளைக் காட்சிக்கு வைக்கப்படும் நகரங்களில் உள்ள பல வீதிகள் பல நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
இறுதிச் சடங்கிற்கு ஈரான் தயாராகி வரும் நிலையில், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ள தளபதி ஒருவர் பல மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாகப் பொதுவெளியில் காணப்பட்டார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் கடைப்பிடிக்கும் கடுமையான நிலைப்பாட்டிற்குப் பொறுப்பானவர்களில் ஜெனரல் அஹ்மத் வாஹிதியும் ஒருவர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு நாடுகளும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
ஈரான் போரின் தொடக்கத்தைக் குறித்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, பிப்ரவரி 8 அன்றுதான் அவர் கடைசியாகப் பொதுவெளியில் காணப்பட்டார்.

Post a Comment