ஐக்கிய இராட்சியத்தில் 10 ஆண்டுகளில் ஏழாவது பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றார்

கடந்த வாரம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றதைத் தொடர்ந்து, பர்ன்ஹாம் அரசாங்கத்தை அமைக்குமாறு மூன்றாம் சார்லஸ் மன்னரால் அழைக்கப்பட்டுள்ளார்.

புதிதாகப் பதவியேற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம், ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத் தலைவராவதற்கான பாரம்பரிய முறைப்படி இன்று திங்கட்கிழமை அந்நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸைச்  சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஐக்கிய இராச்சியம் வாக்களித்த கடந்த 10 ஆண்டுகளில், பர்ன்ஹாம் ஏழாவது  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரிந்துவரும் கருத்துக்கணிப்பு எண்ணிக்கை மற்றும் அவரது தலைமை குறித்த கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, பல அமைச்சர்கள் பதவி விலகியதால், முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஜூன் மாதம் தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான பர்ன்ஹாம், நாடாளுமன்றத்திற்கு மீண்டும் நுழைவதற்காக, ஜூன் மாதம் நடந்த சவாலான சிறப்புத் தேர்தலில் வெற்றி பெற்றார். 

ஆண்டி பர்ன்ஹாம் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து புறப்பட்டு, தற்போது டவுனிங் தெருவுக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

அங்கு சென்றதும் அவர் பிரதமராக தனது முதல் உரையை ஆற்றுவார்.

பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாக பிரதமராக ஆவதற்கு, ஸ்டார்மர் தனது ராஜினாமாவை மூன்றாம் சார்லஸ் மன்னரிடம் முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. 

10 டவுனிங் தெருவிலிருந்து புறப்படும்போது அவர் தயாரித்து வைத்திருந்த உரையில், பதவி விலகும் தலைவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரிந்து கொண்டிருந்த வாக்கெடுப்பு எண்களிலிருந்து தொழிலாளர் கட்சியை ஒரு பெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் தனது பங்கை எடுத்துரைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பிரிட்டன் இப்போது வலிமையாகவும் நியாயமாகவும் இருக்கிறது என்று கூறிய அவர், மேம்பட்ட பொருளாதாரம், குறைந்த NHS காத்திருப்பு நேரங்கள் மற்றும் குறைந்து வரும் குடியேற்றம் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார்.

அவர் தனது வாரிசுக்கு எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்தியதோடு, தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் கூறினார்.

No comments