ஈரான் மீதான தாக்குதல் அச்சுறுத்தலை டிரம்ப் திரும்பப் பெற்றார்: ஒப்பந்தம் விரைவில் என்கிறார்!
ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற தனது அச்சுறுத்தலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தெஹ்ரானுடன் வரும் நாட்களில் கையெழுத்தாகலாம் என்றும் கூறினார்.
டிரம்பின் அறிவிப்பு பங்குச் சந்தை ஏற்றத்திற்கு வித்திட்டதுடன், எண்ணெய் விலைகளையும் வீழ்ச்சியடையச் செய்தது. இருப்பினும், ஈரானின் நிலைப்பாடு தெளிவற்று இருந்ததோடு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஒப்பந்தம் குறித்து தெஹ்ரான் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்று கூறினார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானியத் தலைமையின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறிய டிரம்ப், ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை இரத்து செய்துவிட்டேன் என்று கூறினார்.
ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
அது பெரும்பாலும் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
சாத்தியமான ஒரு புரிந்துணர்வு குறித்து ஈரான் அறிவிக்கும் வரை, இவ்விஷயம் தொடர்பாக டிரம்ப் தெரிவிக்கும் எந்தவொரு செய்தியும், அவரது முந்தைய செய்திகளைப் போலவே கருதப்பட வேண்டும் என அது எச்சரித்தது.
பின்னர், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப் தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தி, பதில் ஆம் என்று நான் புரிந்துகொள்கிறேன் என்று கூறினார்.

Post a Comment