அமெரிக்கா தளங்கள் அமைந்த ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஈரான் தாக்குதல்!!


ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்தி இஸ்லாமியக் குடியரசைத் தாக்குவதைத் தடுப்பது வளைகுடா அண்டை நாடுகளுக்கு உள்ள பொறுப்பு என்றும் எச்சரித்தது.

ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்கு விரிசலை ஏற்படுத்தும் வகையில், ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

ஈரானியப் படைகள் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி, ஜோர்டானில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் இருந்த F35 ரக போர் விமான நிலைகளையும், அல்-அஸ்ராக்கில் உள்ள அமெரிக்க கட்டளை மையத்தையும் உள்ளடக்கிய நான்கு முக்கிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கி அழித்தன என்று அந்நாட்டின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், அரசுக்குச் சொந்தமான IRNA செய்தி நிறுவனம் புதன்கிழமை மேற்கோள் காட்டிய ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரானின் பல வான்வழித் தாக்குதல்களை இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறியுள்ளது.

இன்று அதிகாலையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அங்குள்ள மற்றொரு அமெரிக்கத் தளம் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் பஹ்ரைனின் தலைநகரான மனாமா நகரில் உள்ள ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொருபுறம், குவைத் இராணுவம் தனது வான் பாதுகாப்புப் படைகள் வான்வழி இலக்குகளை தாக்கி அழித்தது என்று கூறியது.

No comments