இலங்கைக்கு கடன் டொலரில் வருகின்றது?
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளன. எனவே, தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி உயர்வு அரசாங்கத்தின் உள்ளகத் தீர்மானங்களால் ஏற்படவில்லை; அது உலகளாவிய வெளியகத் தாக்கங்களாலேயே நிகழ்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது
எதிர்க்கட்சிகள் கூறுவது போல், கடந்த காலங்களில் ஏற்பட்ட கதி இந்த அரசாங்கத்திற்கு ஏற்படாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Post a Comment