பாகிஸ்தானிலிருந்து அராக்சி கிளம்பினார்: தூதுக்குழுவை அனுப்பப்போவதில்லை என்கிறார்- டிரம்ப்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமானுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் அரசு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
அராக்சி இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், அங்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பப் போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அராக்சி தனது ஓமன் பயணத்தை முடித்துக்கொண்டு, ரஷ்யாவுக்குப் பயணம் செய்வதற்கு முன்பு மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கவும், தேவையான அறிவுறுத்தல்களைப் பெறவும் வெளியுறவு அமைச்சரின் தூதுக்குழுவின் ஒரு பகுதி தெஹ்ரானுக்குத் திரும்பியுள்ளது என்றும், அக்குழு ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் அராக்சியுடன் மீண்டும் இணையும் என்றும் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான ஈரானிய தூதுக்குழு, அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் சனிக்கிழமை இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டது.

Post a Comment